- ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை எங்கிருந்து வெளிப்பட்டது? திருநெல்வேலிப் பகுதியில் நெற்கட்டும் சேவலில் ஆட்சிபுரிந்த பூலித்தேவர்
- பாளையக்காரர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசரை குறிக்கிறது
- பாளையக்காரர் முறை யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது? வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாப ருத்ரன் ஆட்சி காலத்தில் காகதீய அரசு
- தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? விஸ்வநாத நாயக்கர்
- விசுவநாத நாயக்கர் பதவியேற்ற ஆண்டு எது? 1529
- விசுவநாத நாயக்கரின் அமைச்சர் யார்?அரியநாதர்
- தமிழகத்தில் மொத்தம் எத்தனை பாளையங்கள் இருந்தன?72 பாளையங்கள்
- கர்னல் ஹெரான் தலைமையிலான படையை கொண்டு 1755 ஆம் ஆண்டு மதுரையைக் கைப்பற்றியவர யார்? மாபூஸ்கான்
- நவாப் சந்தா சாஹிப்பின் முகவர்களாக செயல்படுத்த 3 பத்தாணிய அதிகாரிகள் யார்? மியானா, முடிமையா , நபிகான் கட்டாக்
- ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பின் ஏற்படுத்தியவர் யார்? பூலித்தேவர்
- களக்காடு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பூலித்தேவர் மற்றும் மாபூஸ்கான்
- பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யாவை? நெற்கட்டும்செவல் வாசுதேவநல்லூர் மற்றும் பனையூர்
- புலித்தேவர் உடன் நெற்கட்டும் செவலில் போரிட்டவர் யார்? யூசுப்கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம்
- யூசுப்கான் தூக்கிலிடப்பட்ட ஆண்டு எது?1764
- நெற்கட்டும் சேவல் பூலித்தேவர் கைப்பற்றிய ஆண்டு எது?1764
- 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பூலித்தேவர் தோற்கடித்தவர் யார்?கேப்டன் கேம்பல்
- எதிரியின் கோட்டையில்தான் நுழைந்து பல தலைகளை கொய்தமைக்காக தமக்கு கிடைத்த பரிசு என்று பூலித்தேவர் இடம் கூறியவர் யார்? ஒண்டிவீரன்
- ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு எது? 1730
- காளையார் கோவில் போரில் 1772ல் முத்துவடுகநாதரை தோற்கடித்தவர் யார்? ஆற்காடு நவாப் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்
- வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் வாழ்ந்துவந்தார்?கோபால நாயக்கர்
- தளவாய் என்பவர் யார்? இராணுவத் தலைவர்
- வேலு நாச்சியாரின் தளவாய் யார்? தாண்டவராயனார்
- ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை படைத்தலைவர் யார்? சையது
- திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் யார்? கோபால நாயக்கர்
- விருப்பாட்சி பாளையக்காரராக இருந்தவர் யார்? கோபால நாயக்கர்
- மணப்பாறையில் பாளையக்காரராக இருந்தவர் யார்? லட்சுமி நாயக்கர்( பாறை மீது லட்சுமி அமர்ந்திருந்தாள்)
- தேவதானப்பட்டியில் நாயக்கராக இருந்தவர் யார்? பூஜை நாயக்கர்( தேவர்களுக்கு தான் முதலில் பூஜை நடைபெறும்)
- கோயம்புத்தூரை மையமாக கொண்டு ஆனைமலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர் யார்? கோபால நாயக்கர்
- வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றினார்? ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கர்
- வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் முடிசூட்டிக் கொண்டார்? மருது சகோதரர்கள்
- வேலு நாச்சியாரின் உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று வழி நடத்தியவர் யார்? குயிலி
- பிரிட்டிஷாரின் அனைத்து தளவாடங்களும் வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கில் தற்கொலைபடை தாக்குதல் நடத்திய வேலுநாச்சியார் வேலு நாச்சியார் படைப்பிரிவை சேர்ந்தவர் யார்? குயிலி
- கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலவரி நிலுவை தொகை எவ்வளவு? 3310 பகோடாக்கள்
- கட்டபொம்மனிடம் வரி வசூல் செய்ய ராணுவத்தை அனுப்பியவர் யார்? ஜாக்சன் துரை
- கட்டபொம்மனின் அமைச்சர் யார்? சிவசுப்பிரமணியனார்
- 1898 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் யார்? ஆளுநர் எட்வர்ட் கிளைவ்
- கட்டபொம்மனுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை எவ்வளவு? 1080 பகோடாக்கள்
- தென்னிந்திய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் யார்? சிவகங்கையின் மருதுபாண்டியர்
- திருச்சிராப்பள்ளி அறிக்கையை தயார் செய்தவர் யார்? மருதுபாண்டியர்
- கட்டபொம்மன் யாருடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார்? மருதுபாண்டியர்
- கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கைப்பற்றியவர் யார்? மேஜர் பானர்மேன்
- கட்டபொம்மனுக்கு சரணடையுமாறு ராமலிங்கரை தூது அனுப்பியவர் யார்? மேஜர் பானர்மேன்
- மே 1799இல் திருநெல்வேலியை தாக்க மேஜர் பானர்மென் தலைமையில் படைகளை அனுப்பியவர் யார்? வெல்லெஸ்லி பிரபு
- கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்ட இடம் எது? கள்ளர் பட்டி
- சிவசுப்பிரமணியனார் தூக்கிலிடப்பட்ட இடம் எது? நாகலாபுரம் செப்டம்பர் 13
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கயத்தாறு பழைய கோட்டையில் அக்டோபர் 16
- பெரிய மருது என்று அழைக்கப்பட்டவர் யார்? வெள்ள மருது
- சிவகங்கையின் முத்துவடுகநாதரின் படைத் தளபதிகளாக இருந்தவர்கள் யார்? மருது சகோதரர்கள்
- கட்டபொம்மனின் சகோதரர் யார்? ஊமைத்துரை மற்றும் செவத்தையா
- மருது சகோதரர்களின் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? 1800 முதல் 1801 வரை
- கட்டபொம்மனின் கலகம் எடுக்கப்பட்ட ஆண்டு எது? 1799
- இரண்டாவது பாளையக்காரர் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1800
- கட்டபொம்மனின் சகோதரர்கள் பதுங்கியிருந்த இடம் எது? கமுதி
- கட்டபொம்மனின் சகோதரர்களை சிறுவயலுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்தவர் யார்? சின்ன மருது
- 1801 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றியவர் யார்? காலின் மெக்காலே
- ஜூன் 1801இல் திருச்சிராப்பள்ளி பேர் அறிக்கையை வெளியிட்டவர் யார்? மருது சகோதரர்கள்
- மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? ராமநாதபுரத்தின் அருகே உள்ள திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24
- கட்டபொம்மனின் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? பாஞ்சாலங்குறிச்சி
- தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்ற மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தென்னிந்திய புரட்சி
- தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டு வந்த உடன் படிக்கை எது? கர்நாடக உடன்படிக்கை 1801 ஜூலை 31
- பழைய கோட்டை மன்றாடியார் என்ற பட்டம் பெற்றவர் யார்? தீரன்சின்னமலை
- தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்டவர் யார்? தீரன் சின்னமலை
- கொங்கு பகுதியில் வரி வசூல் செய்த திப்புவின் திவான் யார்? முகமது அலி
- திப்புவின் திவான் முகமது அலிக்கும் தீரன் சின்னமலைக்கும் இடையில் போர் நடைபெற்ற இடம் எது? நொய்யல் ஆற்றங்கரை
- தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓடாநிலை
- தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்து போரிட கையாண்ட முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொரில்லா போர்முறை
- தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் எது? சங்ககிரி கோட்டை 1805 ஜூலை 31
- ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த ஆண்டு எது? 1799
- வேலூர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு எது? 1806
- 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு உடனடி காரணமாக இருந்தவர் யார்? தலைமை தளபதி ஜான் கிரடாக்
- வேலூர் புரட்சி ஏற்பட்ட நாள் எது? 1806 ஜூலை 10
- வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த படைப்பிரிவு எது? முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவு
- வேலூர் புரட்சியின் போது மார்க்கத்தின் குதிரைப் படைத் தளபதியாக இருந்தவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி
- 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியை ஒடுக்கியவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி
- 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு
- வேலூர் புரட்சி கான ஏற்பாடுகளை செய்த சுபேதார்களான ஷேக் ஆடம் ஷேக் ஹமீத் ஆகியோர் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்? இருபத்திமூன்றாம் படைப்பிரிவின் இரண்டாவது பட்டாளம்
Choose the correct answer:
- கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? பூலித்தேவர்
- கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்? ஆற்காடு நவாப்
- சந்தா சாகிப்பின் 3 முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? பூலித்தேவர்
- சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?நாகலாபுரம்
- திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? மருதுசகோதரர்கள்
- வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? 1806 ஜூலை 10
- வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்? சர் ஜான் கிரடாக்
- வேலூர் புரட்சிக்குப் பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? கல்கத்தா
Fill in the blank:
- பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? விசுவநாத நாயக்கர்
- எந்த பாளையக்காரர் ஐத் தவிர மேற்குப் பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்? சிவகிரி பாளையக்காரர்
- வேலுநாச்சியாரும் அவரது மகள் 8 ஆண்டுகளாக யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்? கோபால நாயக்கர்
- கட்டபொம்மனை சரணடைய கூறும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்? இராமலிங்கர்
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு
- மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? இரண்டாவது பாளையக்காரர் போர்
- புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் யார்? பதே ஹைதர்
- வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி
Match the following:
- தீர்த்தகிரி. - ஓடாநிலை
- கோபால நாயக்கர் -திண்டுக்கல்
- பானர்மேன் -ராமலிங்கனார்
- சுபேதார் ஷேக் ஆதம் -வேலூர் புரட்சி
- கர்ணல் பர்கூர் வேலூர் -கோட்டை
To get pdf file E-mail dontnpsc@gmail.com
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள சமூக அறிவியல் பாடத்திற்கான book back வினா விடைகளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
நன்றி.
0 Comments