education

10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்



  1. ஆங்கிலேயர்களின் நாடு பிடிக்கும் நோக்கத்திற்கு முதல் எதிர்வினை எங்கிருந்து வெளிப்பட்டது? திருநெல்வேலிப் பகுதியில் நெற்கட்டும் சேவலில் ஆட்சிபுரிந்த பூலித்தேவர் 
  2. பாளையக்காரர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? ஒரு பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில அரசரை குறிக்கிறது
  3. பாளையக்காரர் முறை யாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது? வாரங்கல்லை ஆட்சி செய்த பிரதாப ருத்ரன் ஆட்சி காலத்தில் காகதீய அரசு
  4. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? விஸ்வநாத நாயக்கர்
  5. விசுவநாத நாயக்கர் பதவியேற்ற ஆண்டு  எது? 1529
  6. விசுவநாத நாயக்கரின் அமைச்சர் யார்?அரியநாதர்
  7. தமிழகத்தில் மொத்தம் எத்தனை பாளையங்கள் இருந்தன?72 பாளையங்கள்
  8. கர்னல் ஹெரான் தலைமையிலான படையை கொண்டு 1755 ஆம் ஆண்டு மதுரையைக் கைப்பற்றியவர யார்? மாபூஸ்கான்
  9. நவாப் சந்தா சாஹிப்பின் முகவர்களாக செயல்படுத்த 3 பத்தாணிய அதிகாரிகள் யார்? மியானா, முடிமையா , நபிகான் கட்டாக்
  10. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட பாளையக்காரர்களின் கூட்டமைப்பின் ஏற்படுத்தியவர் யார்? பூலித்தேவர்
  11. களக்காடு போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது? பூலித்தேவர் மற்றும் மாபூஸ்கான்
  12. பூலித்தேவரின் மூன்று முக்கிய கோட்டைகள் யாவை? நெற்கட்டும்செவல் வாசுதேவநல்லூர் மற்றும் பனையூர்
  13. புலித்தேவர் உடன் நெற்கட்டும் செவலில் போரிட்டவர் யார்? யூசுப்கான் என்றழைக்கப்பட்ட மருதநாயகம்
  14. யூசுப்கான் தூக்கிலிடப்பட்ட ஆண்டு எது?1764
  15. நெற்கட்டும் சேவல் பூலித்தேவர் கைப்பற்றிய ஆண்டு எது?1764
  16. 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் பூலித்தேவர் தோற்கடித்தவர் யார்?கேப்டன் கேம்பல்
  17. எதிரியின் கோட்டையில்தான் நுழைந்து பல தலைகளை கொய்தமைக்காக தமக்கு கிடைத்த பரிசு என்று பூலித்தேவர் இடம் கூறியவர் யார்? ஒண்டிவீரன்
  18. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் பிறந்த ஆண்டு எது? 1730
  19. காளையார் கோவில் போரில் 1772ல் முத்துவடுகநாதரை தோற்கடித்தவர் யார்? ஆற்காடு நவாப் மற்றும் லெப்டினன்ட் கர்னல் பான் ஜோர்
  20. வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சியில் வாழ்ந்துவந்தார்?கோபால நாயக்கர்
  21. தளவாய் என்பவர் யார்? இராணுவத் தலைவர்
  22. வேலு நாச்சியாரின் தளவாய் யார்? தாண்டவராயனார்
  23. ஹைதர் அலியின் திண்டுக்கல் கோட்டை படைத்தலைவர் யார்? சையது
  24. திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைவர் யார்? கோபால நாயக்கர்
  25. விருப்பாட்சி பாளையக்காரராக இருந்தவர் யார்? கோபால நாயக்கர்
  26. மணப்பாறையில் பாளையக்காரராக இருந்தவர் யார்? லட்சுமி நாயக்கர்( பாறை மீது லட்சுமி அமர்ந்திருந்தாள்)
  27. தேவதானப்பட்டியில் நாயக்கராக இருந்தவர் யார்? பூஜை நாயக்கர்( தேவர்களுக்கு தான் முதலில் பூஜை நடைபெறும்)
  28. கோயம்புத்தூரை மையமாக கொண்டு ஆனைமலையில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவர் யார்? கோபால நாயக்கர்
  29. வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் சிவகங்கையை கைப்பற்றினார்? ஹைதர் அலி மற்றும் கோபால நாயக்கர்
  30. வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் முடிசூட்டிக் கொண்டார்? மருது சகோதரர்கள்
  31. வேலு நாச்சியாரின் உடையாள் என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று வழி நடத்தியவர் யார்? குயிலி
  32. பிரிட்டிஷாரின் அனைத்து தளவாடங்களும் வைக்கப்பட்டிருந்த ஆயுதக் கிடங்கில் தற்கொலைபடை  தாக்குதல் நடத்திய வேலுநாச்சியார் வேலு நாச்சியார் படைப்பிரிவை சேர்ந்தவர்  யார்? குயிலி
  33. கட்டபொம்மன் செலுத்த வேண்டிய நிலவரி நிலுவை தொகை எவ்வளவு? 3310 பகோடாக்கள்
  34. கட்டபொம்மனிடம் வரி வசூல் செய்ய ராணுவத்தை அனுப்பியவர் யார்? ஜாக்சன் துரை
  35. கட்டபொம்மனின் அமைச்சர் யார்? சிவசுப்பிரமணியனார்
  36. 1898 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் யார்? ஆளுநர் எட்வர்ட் கிளைவ்
  37. கட்டபொம்மனுக்கு வழங்கப்பட்ட வரிச்சலுகை எவ்வளவு? 1080 பகோடாக்கள்
  38. தென்னிந்திய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டவர் யார்? சிவகங்கையின் மருதுபாண்டியர்
  39. திருச்சிராப்பள்ளி அறிக்கையை தயார் செய்தவர் யார்? மருதுபாண்டியர்
  40. கட்டபொம்மன் யாருடன் சேர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார்? மருதுபாண்டியர்
  41. கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை கைப்பற்றியவர் யார்? மேஜர் பானர்மேன்
  42. கட்டபொம்மனுக்கு சரணடையுமாறு ராமலிங்கரை தூது அனுப்பியவர் யார்? மேஜர் பானர்மேன்
  43. மே 1799இல் திருநெல்வேலியை தாக்க மேஜர் பானர்மென் தலைமையில் படைகளை அனுப்பியவர் யார்? வெல்லெஸ்லி பிரபு
  44. கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியனார் கைது செய்யப்பட்ட இடம் எது? கள்ளர் பட்டி
  45. சிவசுப்பிரமணியனார் தூக்கிலிடப்பட்ட இடம் எது? நாகலாபுரம் செப்டம்பர் 13
  46. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கயத்தாறு பழைய கோட்டையில் அக்டோபர் 16
  47. பெரிய மருது என்று அழைக்கப்பட்டவர் யார்? வெள்ள மருது
  48. சிவகங்கையின் முத்துவடுகநாதரின் படைத் தளபதிகளாக இருந்தவர்கள் யார்? மருது சகோதரர்கள்
  49. கட்டபொம்மனின் சகோதரர் யார்? ஊமைத்துரை மற்றும் செவத்தையா
  50. மருது சகோதரர்களின் கலகம் ஏற்பட்ட ஆண்டு எது? 1800 முதல் 1801 வரை
  51. கட்டபொம்மனின் கலகம் எடுக்கப்பட்ட ஆண்டு எது? 1799
  52. இரண்டாவது பாளையக்காரர் போர் எந்த ஆண்டு ஏற்பட்டது? 1800
  53. கட்டபொம்மனின் சகோதரர்கள் பதுங்கியிருந்த இடம் எது? கமுதி
  54.  கட்டபொம்மனின் சகோதரர்களை சிறுவயலுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு அளித்தவர் யார்? சின்ன மருது
  55. 1801 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை கைப்பற்றியவர் யார்? காலின் மெக்காலே
  56. ஜூன் 1801இல் திருச்சிராப்பள்ளி பேர் அறிக்கையை வெளியிட்டவர் யார்? மருது சகோதரர்கள்
  57. மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? ராமநாதபுரத்தின் அருகே உள்ள திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24
  58. கட்டபொம்மனின் சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடம் எது? பாஞ்சாலங்குறிச்சி
  59. தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்ற மருது சகோதரர்களின் கலகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? தென்னிந்திய புரட்சி
  60. தமிழ்நாட்டில் பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டு வந்த உடன் படிக்கை எது? கர்நாடக உடன்படிக்கை 1801 ஜூலை 31
  61. பழைய கோட்டை மன்றாடியார் என்ற பட்டம் பெற்றவர் யார்? தீரன்சின்னமலை
  62. தீர்த்தகிரி என்று அழைக்கப்பட்டவர் யார்? தீரன் சின்னமலை
  63. கொங்கு பகுதியில் வரி வசூல் செய்த திப்புவின் திவான் யார்? முகமது அலி
  64. திப்புவின் திவான் முகமது அலிக்கும் தீரன் சின்னமலைக்கும் இடையில் போர் நடைபெற்ற இடம் எது? நொய்யல் ஆற்றங்கரை
  65. தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? ஓடாநிலை
  66. தீரன் சின்னமலை ஆங்கிலேயரை எதிர்த்து போரிட கையாண்ட முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கொரில்லா போர்முறை
  67. தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடம் எது? சங்ககிரி கோட்டை 1805 ஜூலை 31
  68. ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த ஆண்டு எது? 1799
  69. வேலூர் புரட்சி ஏற்பட்ட ஆண்டு எது? 1806
  70. 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சிக்கு உடனடி காரணமாக இருந்தவர் யார்? தலைமை தளபதி ஜான் கிரடாக்
  71. வேலூர் புரட்சி ஏற்பட்ட நாள் எது? 1806 ஜூலை 10
  72. வேலூர் புரட்சிக்கு காரணமாக இருந்த படைப்பிரிவு எது? முதல் மற்றும் இருபத்தி மூன்றாம் படைப்பிரிவு
  73. வேலூர் புரட்சியின் போது மார்க்கத்தின் குதிரைப் படைத் தளபதியாக இருந்தவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி
  74. 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியை ஒடுக்கியவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி
  75. 1806 ஆம் ஆண்டு வேலூர் புரட்சியின் போது தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் யார்? வில்லியம் பெண்டிங் பிரபு
  76. வேலூர் புரட்சி கான ஏற்பாடுகளை செய்த சுபேதார்களான ஷேக் ஆடம் ஷேக் ஹமீத் ஆகியோர் எந்த படைப்பிரிவை சேர்ந்தவர்? இருபத்திமூன்றாம் படைப்பிரிவின் இரண்டாவது பட்டாளம்
Choose the correct answer:
  1. கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கும் ஆசை யை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்? பூலித்தேவர்
  2. கர்நாடகப் போர்களில் ஈடுபட்டு இருந்தபோது ஏற்பட்ட செலவினங்களுக்காக கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து கடனாக பணத்தை வாங்கியவர் யார்? ஆற்காடு நவாப்
  3. சந்தா சாகிப்பின் 3 முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்? பூலித்தேவர்
  4. சிவசுப்பிரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?நாகலாபுரம்
  5. திருச்சிராப்பள்ளி சுதந்திர பிரகடனத்தை வெளியிட்டவர் யார்? மருதுசகோதரர்கள்
  6. வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? 1806 ஜூலை 10
  7. வேலூர் கோட்டையில் புதிய ராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்த காரணமாயிருந்த தலைமை தளபதி யார்? சர் ஜான் கிரடாக்
  8. வேலூர் புரட்சிக்குப் பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்? கல்கத்தா

Fill in the blank:

  1. பாளையக்காரர் முறை தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர் யார்? விசுவநாத நாயக்கர்
  2. எந்த பாளையக்காரர் ஐத் தவிர மேற்குப் பகுதியில் வீற்றிருந்த பாளையக்காரர்கள் அனைவரும் பூலித்தேவரை ஆதரித்தனர்? சிவகிரி பாளையக்காரர்
  3.  வேலுநாச்சியாரும் அவரது மகள் 8 ஆண்டுகளாக யாருடைய பாதுகாப்பில் இருந்தனர்? கோபால நாயக்கர்
  4. கட்டபொம்மனை சரணடைய கூறும் தகவலை தெரிவிக்க பானர்மேன் யாரை அனுப்பி வைத்தார்? இராமலிங்கர்
  5. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது? கயத்தாறு
  6. மருது சகோதரர்களின் புரட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது? இரண்டாவது பாளையக்காரர் போர்
  7. புரட்சிக் காரர்களால் வேலூர் கோட்டையில் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டவர் யார்? பதே ஹைதர்
  8. வேலூர் கோட்டையில் புரட்சியை ஒடுக்கியவர் யார்? கர்னல் ஜில்லஸ்பி

Match the following:

  1. தீர்த்தகிரி.                       - ஓடாநிலை 
  2. கோபால நாயக்கர்      -திண்டுக்கல் 
  3. பானர்மேன்                    -ராமலிங்கனார் 
  4. சுபேதார் ஷேக் ஆதம் -வேலூர் புரட்சி
  5.  கர்ணல் பர்கூர் வேலூர் -கோட்டை


To get pdf file E-mail dontnpsc@gmail.com










ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள  சமூக அறிவியல் பாடத்திற்கான book back வினா விடைகளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.




நன்றி.









Post a Comment

0 Comments