education

பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்




தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும்

  1. பண்டைய சோழ அரசின் தலைநகரம் எது? உறையூர்
  2. பிற்கால சோழர்களின் தலைநகரம் எது?தஞ்சாவூர்
  3. பிற்கால சோழ வம்சத்தை உருவாக்கியவர் யார்? விஜயாலயன்
  4. கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
  5. ராஜராஜேஸ்வரம் என்றழைக்கப்படும் கோவில் எது? தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
  6. கங்கைகொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
  7. தெற்கு சுமத்ரா தீவுகளில் வென்ற சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திர சோழன்
  8. பிற்காலச் சோழர்களின் விஜயாலயன் வழிவந்தோரின் கடைசி அரசர் யார்? அதிராஜேந்திரன்
  9. சாளுக்கிய சோழ வம்ச ஆட்சியை தொடங்கியவர் யார்? முதலாம் குலோத்துங்க சோழன்
  10. பாண்டியர் ஆட்சியை நிறுவியவர் யார்? முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
  11. பிற்காலப் பாண்டியப் பேரரசு எப்போது நிறுவப்பட்டது? கிபி 1279
  12. சோழர்களின் நிர்வாக பிரிவுகள் யாவை? பேரரசு} மண்டலம் }நாடு} கூற்றம்} கிராமம்
  13. கிராம ஆட்சி பற்றி விவரிக்கும் கல்வெட்டு எது? காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு
  14. சோழர்களின் ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது? காணிக்கடன்
  15. சோழ அரசில் சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? பள்ளிச் சந்தம்
  16. நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? வேளாளர்
  17. முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை எங்கு உள்ளது? கங்கைகொண்ட சோழபுரம்
  18. திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?நம்பியாண்டார் நம்பி
  19. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவிய சோழ அரசர் யார்? முதலாம் ராஜேந்திரன்
  20. சோழர்களின் காலத்தில் இருந்த வணிக குழுக்கள் எவை? அஞ்சு வண்ணத்தார், மணி கிராமத்தார்
  21. மேற்கு ஆசியர்கள் அராபியர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வணிக குழுவிற்கு என்ன பெயர்? அஞ்சு வண்ணத்தார்
  22. சோழர்களின் ஆட்சியில் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகக்குழு எது? மணி கிராமத்தார்
  23. தொடக்ககால பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகமாக விளங்கியது எது? கொற்கை
  24. கிபி ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் இடமிருந்து பாண்டிய அரசை மீட்டவர் யார்? கடுங்கோன்
  25. சமணர்களை துன்புறுத்திய பாண்டிய மன்னர் யார்? கூன்பாண்டியன் என்றழைக்கப்பட்ட அரிகேசரி மாறவர்மன்
  26. ஹரி கேசரி மாறவர்மன் சமண சமயத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்? திருஞானசம்பந்தர்
  27. முதலாம் வரகுணன் என்று அழைக்கப்பட்டவர் யார்? பராந்தக நெடுஞ்சடையன்
  28. வேள்விக்குடி செப்பேடுகள் இன் கொடையாளி யார்? முதலாம் வரகுண பாண்டியன்
  29. முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் யார் ?இரண்டாம் ராஜசிம்மன்
  30. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ தமிழ்நாட்டில் இங்கு வருகை புரிந்தார்? காயல் துறைமுகம்
  31. செல்வ செழிப்பு மிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று பாண்டிய பேரரசை பாராட்டியவர் யார்? மார்க்கோபோலோ
  32. இரண்டாம் பாண்டிய பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்? சடையவர்மன் சுந்தரபாண்டியன்
  33. கூடல் கோன் கூடல் காவலன் என்று போற்றப்பட்டவர் யார்? பாண்டிய மன்னர்கள்
  34. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் குடியிருப்புக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது? மங்கலம் அல்லது சதுர்வேதி மங்கலம்
  35. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிலத்தின் உண்மையான உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? பூமி புத்திரர் அல்லது வேளாளர்
  36. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்? உத்திர மந்திரி
  37. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது? எழுத்து மண்டபம்
  38. பாண்டியர்களின் நிர்வாகப் பிரிவுகள் யாவை? மண்டலம்} வளநாடு }நாடு }கூற்றம்
  39. பாண்டியப் பேரரசின் நாட்டை நிர்வகித்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்? நாட்டார்
  40. பாண்டியர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது? திருநெல்வேலி மானூர் கல்வெட்டு
  41. பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? குதிரை செட்டிகள்
  42. பாண்டியர்களின் துறைமுகங்களில் விருவிருப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது? காயல்பட்டினம் (தூத்துக்குடி)
  43. பாண்டியர்களின் ஆட்சியில் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன? காசு கழஞ்சு பொன்

Post a Comment

0 Comments